உமரின் அங்கலாய்ப்பு: குவைத் அரசியல் தலைவி அறிவிப்பு - செக்ஸ் அடிமைகளை இஸ்லாமிய ஆண்கள் சட்டப்படி வைத்துக்கொள்ளலாம்

இஸ்லாமிய ஆண்கள் செக்ஸ் அடிமைகளை வைத்துக்கொள்வது சட்டமாக்கவேண்டும் என்று குவைத் நாட்டின் சல்வா அல் முடைரி (Salwa al Mutairi) என்ற முன்னால் அரசியல் தலைவி அறிக்கை விடுத்துள்ளார். சரி இந்த கால கட்டத்தில் இப்படி செக்ஸ் வைத்துக் கொள்வதற்காகவே யார் முன்னுக்கு வருவார்கள்? என்று கேள்வி கேட்டால், இதற்கும் இந்த சகோதரியிடம் பதில் உண்டு. அதாவது இஸ்லாமியரல்லாத நாடுகளின் மீது நடக்கும் போரில் கைது செய்யப்படும் பெண்களை இப்படி "செக்ஸ் அடிமைகளாக" விற்கலாம், அவர்களை வாங்கி குவைத் நாட்டின் ஆண்கள், தங்கள் காம வேட்கையை தீர்த்துக்கொள்ளலாம், இதனால், அவர்கள் (குவைத் ஆண்கள்) தாங்கள் விபச்சாரத்தில் விழாமல் பார்த்துக்கொள்ளலாம். (Source: http://www.faithfreedom.org/features/news/men-should-be-allowed-sex-slaves-and-female-prisoners-could-do-the-job-and-all-this-from-a-woman-politician-from-kuwait/)

இப்படி செய்வதினால், இன்னொரு நன்மையும் உண்டாம், அதாவது "போர் நடந்து முடிந்த பிறகு, அந்த இஸ்லாமியரல்லாத நாட்டில் வாழும் பெண்கள் தங்களுக்கு உணவு கிடைக்காமல் வறுமையில் தவிப்பார்கள், எனவே, இவர்களை இங்கு கொண்டு வந்து விற்றுவிட்டால், இவர்களுக்கு வயிறு நிறைய சாப்பாடும் கிடைக்கும், அதே நேரத்தில் குவைத் ஆண்களின் மனதும் நிறம்பும்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், செசன்யா போரில் பிடிபட்ட அனேக ரஷ்ஷிய பெண்கள் இருப்பார்கள், இவர்களை இப்படி விற்காலம் என்று இந்த சகோதரி கருத்து தெரிவித்துள்ளார்கள்.

என்னே அருமையான சகோதரி!

வறுமையில் வாடும் பெண்களின் வயிறு பசியை போக்க நல்லதொரு திட்டம்!

மேலும் தாம் மக்காவிற்குச் சென்று இருந்த போது, ஒரு இஸ்லாமிய அறிஞரிடம் இதைப் பற்றி கேட்டபோது, இப்படி செக்ஸ் அடிமைகளை வைத்திருப்பது தவறானது அல்ல என்று கூறினாராம், இது ஹராம் இல்லை என்று கூறினார்களாம். மற்றும் குவைத்திலும் அனேக இஸ்லாமிய அறிஞர்களை கேட்டபோதும், இது ஹராம் இல்லை என்று சொன்னார்களாம்.

ஒரு சௌதி அறிஞர் கூறும் போது, ஒரு இஸ்லாமிய நாடு, இஸ்லாமியரல்லாத நாட்டின் மீது படையெடுத்து ஜெயித்தால், அந்த நாட்டில் கிடைக்கும் இஸ்லாமியரல்லாத பெண்கள் தான் இப்படிப்பட்ட செக்ஸ் அடிமைகளாக வைத்துக்கொள்ளலாம் என்றாராம்.

இந்த சகோதரின் கூற்றுப்படி, "இப்படி செக்ஸ் அடிமைகளை வைத்து இருப்பது வெட்கப்படவேண்டிய விஷயமல்ல, இது இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி தடை செய்யப்பட்ட ஒன்றல்ல".

இதனை மேலும் விளக்க, ஒரு எடுத்துக்காட்டையும் இந்த அருமை அன்னை சொல்லியுள்ளார்கள், அதாவது 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹாருன் அல் ரஷீத் (Haroun al-Rashid) என்ற இஸ்லாம்ய அரசர் 2000 வைப்பாட்டிகளை (செக்ஸ் அடிமைகளை) வைத்திருந்தாராம். ஆகையால், இது தவறல்ல.

கடைசியாக, இந்த சகோதரின் அறிவுரை என்னவென்றால், எப்படி வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்களோ அதுபோல, பல அலுவலகங்களை திறந்து, இப்படிப்பட்ட செக்ஸ் அடிமைகளை விற்கும் வியாபாரம் கூட செய்ய நாடு முன் வரவேண்டும் என்பதாகும்.

இந்த தலைவியின் இந்த அறிக்கைகள், அனேகரை துக்கப்படுத்தியுள்ளது. ஆனால், இவர் மீது குறை கூற நமக்கு வாய்ப்பு இல்லை, ஏனென்றால், இஸ்லாம் எதனை அங்கீகரித்துள்ளதோ அதனைத் தான் இவர்களும் கூறியுள்ளார்கள். பணம் படைத்த ஆண்கள், தங்கள் காமவேட்கையை தீர்ப்பதற்காக இப்படி செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதே! திருமணத்திற்கு வெளியே இப்படி போரில் பிடிபட்ட பெண்களை வைத்துக்கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது, அதனைத் தான் இவர்களைப்போல இருப்பவர்கள் கருத்து கூறுகிறார்கள்.

இந்த சகோதரியிடம் நாம் கேட்க விரும்பும் கேள்விகள்:

ஆண்களும், ம(மா)னக்கட்டுப்பாடும்

  • ஆண்கள் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால், அவர்கள் இப்படிப்பட்ட கீழ்தரமான செயல்களை செய்யவேண்டியதில்லையே!
  • ஆண்கள் விபச்சாரம் செய்யாமல் இருக்க இந்த ஏற்பாடு சரியானது என்று நீங்கள் கருதுவீர்களானால், இப்படி அடிமைகளிடம் உடலுறவு கொள்வதும் கூட "ஒரு விபச்சாரமில்லையா?"
  • ஆண்களில் சிலருக்கு காமவேட்கை அதிகம் என்பதால், அவர்களுக்கு இப்படிப்பட்ட சட்டப்பூர்வமான விபச்சாரத்தை செய்ய அனுமதி கொடுப்பதை விட, அவர்களுக்கு அறிவுரை கூறி, கட்டுப்பாட்டுடன் வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கலாமே!
  • ஆண்களின் காமவேட்கையை பூர்த்தி செய்வதற்கு செக்ஸ் அடிமைகளை பயன்படுத்தலாம் என்று ஒரு தீர்வை கொடுக்கும் நீங்கள், அந்த குடும்பத்தில் இருக்கும் அந்த ஆணின் மனைவியின் நிலை என்ன என்று எண்ணிப்பார்த்தீர்களா?
  • ஒரு பெண் எதை வேண்டுமானலும் பகிர்ந்துக்கொள்வாள், ஆனால், தன் கணவனை பகிர்ந்து கொள்ளமாட்டாள், அப்படி பிடிவாதமாக அந்த ஆண் திருமண பந்தத்திற்கு வெளியே உடலுறவு கொள்வது என்பது குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்காதா?
  • சமுதாயத்தை மதித்து, தன் குடும்பத்தை மதித்து, தன் ஆசைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஒரு ஆண், இப்படி சட்டப்படி விபச்சாரம் செய்ய அனுமதி கொடுப்பதைக் கண்டால், இத்தனை நாட்கள் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்த தன் நடத்தையை கெடுத்துக்கொண்டு, இப்படி செக்ஸ் அடிமைகளை விலைக்கு வாங்கி தன் நல்ல நிலையை விட்டு இறங்கிவிடுவானே, இது தவறு இல்லையா?
  • இஸ்லாமிய ஆண்களின் நிலைக்கே வருகிறேன், ஒரு முஸ்லிம் நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று இஸ்லாமிய சட்டம் சொல்லும் போது, உங்கள் முஸ்லிம்களுக்கு நான்கு மனைவிகளும் போதவில்லையா? நான்கு பேர் இருந்தும் அவர்களின் காமம் தணியவில்லையா?
  • இஸ்லாமியரல்லாத ஆண்களை எடுத்துக்கொண்டால், ஒரு பேச்சுக்காகவாவது சொல்லாம்(பேச்சுக்காக மட்டுமே), அதாவது ஒரு மனைவியோடு வாழ்கிறான், ஆசைகள் அவனுக்கு அதிகம், அதனால் இந்த ஏற்பாடு என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது, ஆனால், ஏற்கனவே 4 மனைவிகளை உடைய முஸ்லிமுக்கு இன்னும் தன் ஆசை தீரவில்லையானால், அதனை என்னவென்றுச் சொல்வது? வாழ்க்கையே காமம் தானா? வேறு வேலையே முஸ்லிமுக்கு இருப்பதில்லையா? ஒரு சதவிகிதம் கூட 'மனக்கட்டுப்பாடு, ஒழுக்கம்' போன்றவைகள் பற்றி பேசுவது/சிந்திப்பது இல்லையா?
  • அன்பான சகோதரியே, பணம் படைத்தவன் தன் காமவேட்கையை தீர்த்துக்கொள்ள வழியைச் சொன்னீர்கள், ஆனால், ஏழை முஸ்லிம் என்ன செய்யவான்? அவனுக்கு இருக்கும் அதிகமான காமத்திற்கு வழி என்ன? எப்போதாவது அவன் விபச்சாரம் செய்ய அனுமதி உண்டா? அல்லது ஏழைகள் மட்டும் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்று நீங்கள் கூறப்போகிறீர்களா? பணக்காரனுக்கு ஒரு நியாயம் ஏழைக்கு ஒரு நியாயமா? செல்வந்தனோ ஏழையோ இருவரும் மனிதர்கள் தானே.. இருவருக்கும் ஆசைகள் (மிதமிஞ்சிய ஆசைகள்) இருக்குமல்லவா?
  • ஒருவேளை எங்கள் ஆண்களுக்கு (முஸ்லிம் ஆண்களுக்கு) அதிகமாக ஆசை உள்ளது என்று முஸ்லிம் பெண்கள் நினைப்பீர்களானால், முதலாவது அவர்கள் அதிகமாக பெண்கள் விஷயங்கள் பற்றி பேசுவதை, வெள்ளிக் கிழமைகளில் இஸ்லாமிய சொர்க்கம் பற்றிய பயான்களை (சொற்பொழிவுகளை) கேட்பதை நிறுத்தச் சொல்லுங்கள், அப்போது தானாக அடங்கும் ஆசை. மதரஸாக்களில், மசூதிகளில் பேசுப்படும் விவரங்களை கொஞ்சம் காது கொடுத்து கேட்பீர்களானால், எங்கே பிரச்சனை என்பது உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். ஒழுக்கம் உயிரை விட மேலானது என்ற வள்ளுவரின் வாக்கை படித்த அனுபவம் நமக்கு உண்டா?

காபிர்களின் 21ம் நூற்றாண்டை முஸ்லிம்களின் 7ம் நூற்றாண்டாக்காதீர்கள்?

  • செசன்யா நாட்டில் ரஷிய பெண் போர் கைதிகள் இருப்பார்கள், அவர்களை விற்கலாம் அல்லவா? என்று அறிவுரை கூறும் நீங்கள்… உங்கள் நாட்டில் ஒரு இஸ்லாமியரல்லாத நாடு போர் தொடுத்து, உங்களை போர் கைதியா ஆக்கினால், நீங்கள் வேறு நாட்டில் ஒரு செக்ஸ் அடிமையாக விற்கப்பட்டால், உங்கள் நிலை எப்படி இருக்கும்?
  • உங்கள் எஜமானின் வீட்டில், அவனது செக்ஸ் ஆசைகளை மட்டும் தீர்க்கும் ஒரு இயந்திரமாக இருக்க நீங்கள் விரும்புவீர்களா?
  • சாப்பாடு இல்லாமல் மரிக்கும் பெண்களுக்கு இது நன்மை செய்வதாக அமையும் என்றுச் சொல்லும் நீங்கள், உங்களுக்கு இதே நிலை வருமானால் 'உயிர் வாழ்வதற்காக உணவு கொடுக்கிறார்கள்', இதனால், இந்த வேலைக்கு நான் தயார் என்று சொல்லமுடியுமா?
  • போர் மூண்டதால் உணவு கிடைக்காமல் ஒரு நாடு தள்ளாடும் போது, அம்மக்களுக்கு உண்வு, உடை இருப்பிட வசதிகளை செய்ய உங்கள் நாட்டின் செல்வத்தில் ஒரு பாகத்தை அனுப்பி அவர்கள் மானத்தை காப்பாற்றுவதை விட்டுவிட்டு, எங்கள் ஆண்களுக்கு ஆசை அதிகம், ஆகையால், உணவு இல்லாதவர்களை எங்கள் ஆண்களின் காம பசிக்கு இறையாக்கிக்கொள்கிறோம் என்றுச் சொல்வது நியாயமாக தெரிகின்றதா?
  • இறைவன் நமக்கு செல்வத்தை அதிகமாக கொடுக்கும் போது, அதை பயன்படுத்தி மற்ற மக்களின் பசியை போக்கவேண்டுமே ஒழிய அவர்களின் மானத்திற்கு விலை பேசக்கூடாது.
  • ஒரு இஸ்லாமிய நாடு (ஈராக்) இன்னொரு இஸ்லாமிய நாட்டை (குவைத்) பிடித்த போது, வேறு ஒரு இஸ்லாமிரல்லாத நாடு (அமெரிக்கா) உங்களுக்கு ஆதரவாக நின்று உங்களை விடுதலையாக்கியதே. இதையெல்லாம் மறந்துவிட்டு, இன்று இஸ்லாமியரல்லாதவனின் மனைவியை, மகளை, தாயை உங்கள் ஆண்களின் பசிக்கு அழைக்கிறீர்கள்? இது உங்களுக்கு நியாயமாக உள்ளதா? 

நாட்டுவாசியை காட்டுவாசி ஆக்காதீர்கள், பிளீஸ்!

அரசர்கள் ஆட்சி செய்த கடந்த காலத்தில், அனேக தீய செயல்கள் நடந்துள்ளன. மண்ணுக்கும், பெண்ணுக்கும், பொன்னுக்கும் ஆசைப்பட்ட போர் புரிந்தாரக்ள். கேட்பார் யாருமில்லை என்ற நிலையில் அரசர்கள் தங்கள் விருப்பப்படி செய்து வந்தார்கள்.

இன்று அப்படி இல்லை, சுனாமி வந்து மக்களை துன்பப்படுத்தும் போது, அனேக நாடுகள் உதவி கரம் நீட்டுகின்றன, உணவும், உடைகளும் மருந்துகளும் கொடுத்து அனுப்புகின்றன. தன் குடும்பமே துன்பத்தை அனுபவிக்கிறது என்று கவலைக்கொண்டு உலக மக்கள் தாராளமாக பணத்தை, பொருளை கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை உயர்த்த முயற்சி எடுக்கிறார்கள். நீங்கள் கருதுவது போல, உணவு இல்லாத மக்களின் நிலையை உங்கள் காமவேட்கையை தீர்க்க பயன்படுத்துவதில்லை.

அநியாயமாக ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது போர் தொடுத்தால் பல நாடுகள் ஒன்று சேர்ந்து பிரச்சனையை நிவர்த்தி செய்ய முன்னுக்கு வருகின்றன. யாரோ எங்கேயோ இரண்டு நாடுகள் போர் புரிகின்றன, நமக்கு என்ன வந்தது? என்ற தோரணையில் அல்லாமல், பெரும்பான்மையான நாடுகள் பிரச்சனைகளை தீர்க்க முன்வருகின்றன.

தற்காலத்தில் ஒவ்வொரு நாடும் தன் சுய இராணுவ பலத்தை அதிகரித்துக்கொள்வது, வீணாக மற்ற நாடுகள் மீது போர் தொடுத்து, வென்று, அந்நாட்டவரின் சொத்துக்களை அபகரிப்பதற்கும், கைதிகளாக மக்களை கொண்டுவந்து அடிமைகளாக விற்பதற்காக அல்ல, அதற்கு பதிலாக, தன் நாட்டின் மீது யாராவது போர் தொடுத்தால், சரியான பதிலடி கொடுத்து, தன் நாட்டு மக்களின் நலனை காப்பதற்காக ஆகும்.

எனவே, உலக சரித்திரத்தில் நடந்துமுடிந்துவிட்ட அனேக கோரமான போர்கள், சண்டைகள், மரணங்கள், கற்பழிப்புக்கள், அடிமை வியாபாரம் போன்றவைகளை மறுபடியும் தலை தூக்காத படிக்கு நாம் பார்த்துக்கொள்ளவேண்டுமே ஒழிய மறுபடியும் மனிதனை காட்டுவாசியாக்கும் முயற்சி சரியானது அல்ல. 

மூலம்: http://www.isakoran.blogspot.in/2012/06/blog-post_14.html

உமரின் இதர கட்டுரைகள்