அன்புள்ள அப்பா(அல்லா)விற்கு, ஆயிஷா எழுதும் கடிதம்-1

சாட்சி சொல்வதில் ஒரு பெண் சரிபாதியாக மதிக்கப்படவேண்டும் - குர்-ஆன் 2:282

[ஆயிஷா பி.எஸ்.சி முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். குடும்பத்தில் மொத்தம் 5 பேர், இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன் மற்றும் தாய். தந்தை கடந்த ஆண்டுதான் காலமானார். குடும்பத்தின் முத்தமகள் என்பதால் குடும்ப பாரம் சுமக்கும் பொறுப்பு ஆயிஷாவின் மீது விழுந்தது . ஒரு சொந்த வீடு தவிர, வேறு சொத்து ஒன்றுமில்லை. தனக்கு வயது 24ஐ தாண்டிவிட்டது. தம்பிக்கு இப்போது வயது 7 ஆகிறது. இரண்டு சகோதரிகளும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். குர்-ஆனை அரபியில் பலமுறை படித்தாகிவிட்டது. முதல் முறை குர்-ஆனை படித்துமுடிக்கும் போது, அப்பா ஒரு விருந்து செய்து சொல்லிக்கொடுத்த ஆசிரியைக்கு மரியாதை செய்தது இன்னும் மனதைவிட்டு மறையவில்லை. ஒரு நாள் ஆயிஷாவிற்கு ஒரு யோசனை வந்தது, இன்றிலிருந்து குர்-ஆனை தமிழில் படிக்கலாம் என்று, தமிழ் குர்-ஆனை வாங்கினாள், படித்தாள், இதோ தன் சந்தேகங்களை கடிதமாக அல்லாவிற்கே எழுதுகிறாள்.]

அன்புள்ள அப்பா(அல்லாஹ்)விற்கு,

ஆயிஷா எழுதும் கடிதம். நலம் நலமறிய ஆவல். உங்களிடம் நலம் விசாரிப்பது கொஞ்சம் ஓவர் தான். நீங்கள் எப்போதும் நலமாகவே இருப்பீர்கள்.

நீர் கொடுத்த வேதத்தை(குர்-ஆன்) நான் அரபியில் பல முறைபடித்துள்ளேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் நான் அதிக பக்தியுடையவளாக என் உள்ளத்தில் உணர்ந்துள்ளேன். என்னுடைய தந்தை எங்களை விட்டு போனபிறகு நாங்கள் தனிமையையும், பாதுகாப்பின்மையையும் உணருகிறோம். இதை போக்கிக்கொள்ளவும், இன்னும் நீர் குர்-ஆனில் என்ன சொல்லியிருக்கிறீர் என்று அறிந்து ஆறுதல் அடைய ஆவலுள்ளவளாய், நான் குர்-ஆனை தமிழில் படிக்க ஆரம்பித்தேன். எப்போதும் போல நான் சுத்தமாக குளித்துவிட்டு, அரபி குர்-ஆனை எவ்வித கண்ணியத்தோடு படிக்கிறேனோ, அதே கண்ணியத்தோடு தமிழ் குர்-ஆனையும் படிக்க ஆரம்பித்தேன்.

இப்படி படிக்கும்போது எனக்கு பல சந்தேகங்கள் வருகிறது. என் மனது சிலவற்றை ஏற்க மறுக்கிறது. அதை யாரிடம் கேட்பேன், எங்கள் அப்பா எங்களோடு இல்லை, எனவே உமக்கு நான் கடிதம் எழுதுகிறேன். எல்லா அனாதைகளுக்கும் தகப்பன் நீர் ஒருவர் தானே. இக்கடிதத்தை நான் என் டைரியில் எழுதிவைக்கிறேன், நீர் படித்து எனக்கு எப்படியாவது பதிலை தரவேண்டும். இறைவன் மனதின் எண்ணங்களை அறிபவன் என்றுச் சொல்வார்கள், எனவே என் டைரியை படிப்பதற்கு உமக்கு சிரமமிருக்காது.

1. சாட்சி சொல்வதில் ஒரு பெண் சரிபாதியாக மதிக்கப்படவேண்டும், குர்-ஆன் 2:282

அல்லா, நான் குர்-ஆன் இரண்டாம் அதிகாரம் படிக்கும்போது 282ம் வசனத்தை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஒரு பெண் சாட்சி சொல்லும்போது பாதியாக மதிக்கப்படுவாள் என்று நீர் சொல்லியிருக்கிறீர்.

குர்-ஆன் 2:282

...(நீங்கள் சாட்சியாக ஏற்கக்கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்;...

Quran 2:282 YUSUFALI: ... and get two witnesses, out of your own men, and if there are not two men, then a man and two women, such as ye choose, for witnesses, so that if one of them errs, the other can remind her....

ஹதீஸ்களை பார்க்கும் போது, முஹம்மது பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்கள், பக்தியில் குறைவுள்ளவர்கள் என்றுச் சொல்கிறார். நரகத்தில் அதிகமாக காணப்படுவது பெண்கள் தான் என்றுச் சொல்கிறார்.

புகாரி 304. 'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். Volume :1 Book :6

சாட்சியாக கருதுவதற்கு ஒரு ஆணுக்கு இரு பெண்கள் சமம் என்று எப்படி நீர் சொல்கிறீர்? இதற்கு காரணம் கேட்டாள் "அறிவில் பெண்கள்" 

குறைபாடு உள்ளவர்கள் என்று முஹம்மது சொல்கிறார். உம்முடைய தூதரிடம் இதைப்பற்றி கேள்வி கேட்டால், இப்படியிருக்கும் என்று ஒரு வெப்தளத்தில் படித்தேன்.

கேள்வி: "ஓ முஹம்மது, ஏன் நரகத்தில் அதிகமாக பெண்கள் இருக்கிறார்கள்?"

முஹம்மது: "ஏனென்றால், அவர்களுக்கு பொது அறிவு (அ) பகுத்தறிவு (Common-Sense) குறைவு"

கேள்வி: "அவர்களுக்கு பகுத்தறிவு குறைவு என்று உமக்கு எப்படி தெரியும்?"

முஹம்மது: "ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக இருப்பதினால், அவர்களுக்கு அறிவு குறைவு என்று அறிந்துக்கொள்ளலாம்"

கேள்வி: "ஆனால், ஏன் அவர்களின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக உள்ளது?"

முஹம்மது: "ஏனென்றால், அவர்கள் அறிவில் குறைபாடு இருப்பதனால்".

கேள்வி: "அவர்கள் அறிவில் குறைபாடு இருப்பது உமக்கு எப்படி தெரியும்?"

முஹம்மது: "அவர்கள் அறிவு குறைபாடு இருப்பதை, அவர்களின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக இருப்பதினால், நாம் அறிந்துக்கொள்ளலாம்".

கேள்வி: "மறுபடியும், ஏன் அவர்கள் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக உள்ளது?"

முஹம்மது: "ஏனென்றால், அவர்கள் மூளையறிவு குறைவு".

கேள்வி: "குறைபாடு அவர்களில்லை, உம்முடைய வாதத்தில் உள்ளது".

1) ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதி என்று குர்-ஆன் 2:282ல் சொன்னதால், பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்களா?  அல்லது

2) பெண்கள் (பிறப்பிலிருந்தே) அறிவில் குறைவுள்ளவர்கள் என்று நீரும், உம் தூதரும் சொல்வதால், ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியா? 

இதில் எது உண்மை. இது ஒரு தவறான, நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு வசனமாகும்.

இதை உலகத்தில் யார் சொல்லியிருந்தாலும், போகட்டும் நாக்கிலே எலும்பு இல்லை என்பதால் மனிதன் எதையானாலும் பேசுவான் என்று நான் விட்டுவிட்டுயிருப்பேன். ஆனால், எல்லாம் அறிந்த இறைவனாகிய "நீர் (அல்லா)" சொன்னது தான் என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.

2. மூளை அல்லது அறிவு என்பது பயிற்றுவிக்கவேண்டியது:

அல்லா, பிறக்கும்போது யாரும் புத்திசாலியாக பிறப்பதில்லை, மற்றும் முட்டாளாக பிறப்பதில்லை. நாம் அந்த மூளைக்குத்தரும் பயிற்சி, படிப்பு, சூழ்நிலை மற்றும் நண்பர்கள் முலமாக மனிதன் (ஆண், பெண்), அறிவாளியாகவோ அல்லது சிறிது அறிவில் குறைவுள்ளவனாகவோ மாறுகிறான். இதில் ஆண்கள் அறிவில் எப்போதும் சிறந்து விளங்குவார்கள், பெண்கள் முட்டாள்களாக இருப்பார்கள் என்றுச் சொல்வது மிகப்பெரிய தவறாகும். பிறக்குப்போது மூளைவளர்ச்சி குன்றியவர்களை நாம் இதில் செர்த்துக்கொள்ளக்கூடாது. அப்படி சேர்த்துக்கொண்டாலும் இதிலும் இருவர் ஆண் பெண் உண்டு. 

என் மனைவி, அல்லது சகோதரி அறிவில் சிறிது குறைவுள்ளவள், பக்தியில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை என்றுச் சொல்ல முஹம்மதுவிற்கு உரிமை உண்டே தவிர, உலக மொத்த பெண்ணினமே, அறிவில் குறைவுள்ளவர்களாக இருப்பார்கள், எனவே அவர்களின் சாட்சி ஆணின் சாட்சியில் பாதி என்றுச் சொல்ல அவருக்கு உரிமையில்லை.

பகுத்தறிவு, நேர்மை, நீதி, நியாயம், உண்மை, பொய், கடமை இவைகளின் இனம் (Sex) என்ன அல்லா? ஆணா அல்லது பெண்ணா? ஆண்கள் எப்போதும் நேர்மையாகவே இருப்பார்கள், பெண்கள் நேர்மை தவறுவார்கள் என்றுச் சொல்லி, இவைகளுக்கு ஒரு இனத்தை(Sex) கொடுத்த பெருமை இஸ்லாமையேச் சாரும்.

பெண்களை தலைவர்களாக நியமித்தால், அந்த நாடு அல்லது நிறுவனம் முன்னேறாது என்று முஹம்மது சொல்லியிருப்பது இப்போதுள்ள மனிதனுக்குத் தெரிந்தால், அவன் எவ்வித கஷ்டத்தில் இருந்தாலும், ஒரு நிமிடம் தன்னை மறந்து சிரித்துவிடுவான் அல்லா!....

புகாரி 4425. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார் 

ஜமல் போர் சமயத்தில், அதில் ஈடுபட்டவர்களுடன் நானும் சேர்ந்துகொண்டு (ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஆதரவாகப்) போரிட முனைந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் எனக்குப் பயனளித்தது. பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் 'தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது" என்று கூறினார்கள். (இதுதான் எனக்குப் பயனளித்த நபி(ஸல்) அவர்களின் சொல்.) Volume :5 Book :64"

இதோ உலகத்தின் சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த சில பெண் முத்துக்கள்: 

1. 1901 லிருந்து இன்றுவரை 33 பெண்கள் நோபல் பரிசுகள் பெற்றுயிருக்கின்றனர். 

2. மேரி கியுரி இரண்டு முறை நோபல் பரிசு வென்றவர் (1903, 1911)பொலோனியம் மற்றும் ரேடியம் கண்டுபிடித்ததற்காக (உலகத்தின் பெண் தலைவர்களின் பட்டியல் புகைப்படத்துடன் - WORLDWIDE GUIDE TO WOMEN IN LEADERSHIP

3. சரோஜினி நாயுடு, அன்னை தெரேசா, இந்திய பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி, இலங்கை பிரதமர் பண்டாரநாயகே, தமிழ்நாட்டின் முன்னால் உயர்நிதீ மன்றத்தின் நீதிபதி பாத்திமா பீவி அவர்கள், இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ் கிரன் பேடி அவர்கள், இமயமலை சிகரத்தை அடைந்த முதல் ஜப்பானிய பெண் "ஜுன்கோ டெபை - ஆண்டு 1975" இன்னும் பலர்.

4. உம்முடைய சட்டம் நடைபெறும் சவுதி அரேபியாவில் பெண்கள், கார் ஓட்டுவதற்கு முன்பாகவே , காபிர் நாடாகிய (என் அருமை தாய் நாடு) இந்தியாவின் அருமை புதல்வி "கல்பனா சாவ்லா" வின்னிற்கு ராக்கெட்டில் சென்று விட்டாள். உம்முடைய சட்டம் நடைபெறும் நாட்டின் பெண்கள் தேர்தலில் ஓட்டுரிமை பெறுவதற்குள், காபிர் நாடுகளில் பெண்கள் முதலமைச்சர்கள், பிரதமமந்திரிகள் ஆகிவிடுகின்றனர்.

இவர்களின் அறிவு குறைபாடுள்ளதா? அல்லது நீங்கள் சொன்னது இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் தானா? அல்லா, இஸ்லாமிய பெண்களையும் படிக்க வையுங்கள், "ஷீரின் எபாடி" போன்ற பல பெண்கள் நொபல் பரிசுகளை வெல்வார்கள்.

5. சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு இஸ்லாமிய பெண்ணிற்கு "2003 அமைதி நோபல் பரிசு" கிடைத்தது. அவர் தான் "ஷீரின் எபாடி". நான் ஒன்று சொல்லட்டுமா அல்லா? இந்த பரிசு இப்பெண்மனிக்கு எதற்காகத் கிடைத்தது தெரியுமா? இவர் ஈரானில் உள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் இழி செயல்களிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும் காப்பாற்றும்படியாக அதிகமாக உழைத்ததால் தான்.

இவர் வழக்கறிஞராக பல ஆண்டுகள் பெண்களுக்கு சேவைசெய்தார். இவருக்கு நீதிபதியாக பதவி உயர்வு கிடைக்கும்போது, ஈரானின் இமாமகள், இது இஸ்லாமிற்கு எதிரானது, ஒரு பெண்ணின் அறிவுரையை ஆண்கள் கேட்கக்கூடாது என்றும், பெண்களை ஆளுகை செய்கிறவர்களாக நியமிக்கக்கூடாது என்றும் ஹதீஸில் முஹம்மது சொல்லியிருக்கிறார், எனவே இது செல்லாது என்றுச் சொல்லி, இவரை நீதிபதி பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள். 

இவர் தன் முயற்சியை விடாது போராடிக்கொண்டிருந்தார். 15 ஆண்டுகளுக்கு பிறகு இதே இமாம்கள், இதே இஸ்லாம், இது செல்லும் என்றுச் சொல்லி மறுபடியும், இவரை நீதிபதி செய்தார்கள்.இவருடைய 15 ஆண்டுகளின் சேவை இஸ்லாம் சட்டத்தால் வீணாக்கப்பட்டது. எத்தனை பெண்களின் வாழ்க்கை மலர்ந்திருக்குமோ, தெரியாது. இதற்கெல்லாம் நீர் தான் காரணம். உம்முடைய பதில் என்ன அல்லா?

Because of this, we all spent a lot of time investigating whether this was really true. We read, researched, and wrote articles about it. Finally, after 15 years, I'm happy to say that they have accepted that women can be judges. At the moment, we have two female judges in the Appeal Courts. So you see, when they said women couldn't be judges, they said it was because Islam had said so. But now they say Islam allows female judges, so my point is that with time, interpretations differ. Source: Shirin Ebadi Interview

3. இந்த வசனத்தினால் பெண்களுக்கு என்ன தீமை நடந்துவிடுகிறது என்று கேட்கிறீர்களா?

பாகிஸ்தானில் "ஹுதூத் சட்டம்" என்று ஒரு இஸ்லாமிய சட்டம் இருந்தது. குர்-ஆன் படியும், ஹதிஸ்படியும் தண்டனை (ஷரியா) கொடுப்பது தான் இதன் நோக்கம். இது 1979ல் கொண்டுவரப்பட்டது, 2006ல் ரத்துசெய்யப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் இன்னும் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதன்படி,ஒரு பெண்ணை ஒருவன் கற்பழித்துவிட்டால், அந்தப் பெண், நான்கு ஆண்களை சாட்சியாக் கொண்டுவர வேண்டும், கொண்டுவரமுடியவில்லையானால் அவளுக்கு வேசி என்று பெயர் சூட்டி, தண்டனை அளிக்கப்படும், சில நேரங்களில் கல்லெரிந்தும், ஊரின் நடுவில் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்படுவாள். இப்படி பல பெண்கள், ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டிலும் அழிந்துக்கொண்டுவருகிறார்கள். 

மூலம்:Wikipedia 

In Pakistan, rape is dealt with under Islamic laws known as the Hudood Ordinances. These criminalise all sex outside marriage. So, under Hudood, if a rape victim fails to present four male witnesses to the crime, she herself could face punishment. This has made it almost impossible to prosecute rape cases. According to the country's independent Human Rights Commission, a woman is raped every two hours and gang-raped every eight hours in Pakistan. These figures are probably an under-estimation as many rapes are not reported. மூலம்: BBC 

[19 வயது ஈரானின் நாஜினைன், நிலையை இங்கு படிக்கவும்

அல்லாஹ், இதற்கு பதில் சொல்லும்

1. எந்த ஒரு சண்டாளனாவது, நான்கு சாட்சிகளை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட காரியத்தைச் செய்வானா?

2. இப்படிப்பட்ட சட்டம் நாட்டில் இருந்தால், சில விஷமிகளுக்கு இப்படிப்பட்ட் வேலைகளைச் செய்ய அதிக தைரியம் வருமல்லவா?

3. இப்படிப்பட்ட வழக்குகள் பகிஸ்தானில் 2,10,000 நிலுவையில் உள்ளதே!, இந்த பெண்களின் நிலை என்ன?

4. இதற்கெல்லாம் காரணம் நீரல்லவோ அல்லா?

5. பெண்களின் அறிவு குறைவு என்று தெரிந்த உமக்கு, ஆண்களின் எண்ணங்கள் எப்படியிருக்கும் என்று தெரியாமல் போனதென்ன?

முடிவாக அல்லா, என் கேள்விகளை எல்லாம், உமக்கு தெரிவித்துள்ளேன். இன்னும் பல கேள்விகள் உள்ளது. அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன். ஒன்று மட்டும் நிச்சயம், "எந்த சமுதாயத்தில் பெண்கள் முன்னேறவில்லையோ, அந்த சமுதாயம் முன்னேறமுடியாது.".

இப்படிக்கு

ஆயிஷா

இந்தியா


ஆயிஷாவின் இதர கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்