2019 கிறிஸ்மஸும் NRCயும்: இயேசுவும், மரியாளும், யோசேப்பும் அகதிகளாக இருந்தார்களா?

இது என்ன புது கூத்து? தற்போது நாட்டில் நடக்கும் NRC & CAA கூத்து போதாதா? என்று கேள்வி கேட்கத்தோன்றுகிறதா உங்களுக்கு?

தலைப்புக்கள்:

1) இயேசுவையும், மரியாளையும், யோசேப்பையும் அகதிகளாக சித்தரிக்கும் படம்

2) தேசிய  குடிமக்கள் பதிவேடு (NRC) செய்யச் சென்ற இயேசுவின் குடும்பம்

3) எகிப்து தேசத்தில் இயேசுவும், அவரது குடும்பமும் அகதிகளாக இருந்தார்களா?

4) அந்நியர்களை/அகதிகளை எப்படி கவனிக்கவேண்டும் என்று பைபிள் சொல்கிறது?

5) முஹம்மதுவும் அகதியாக மதினாவிற்குச் சென்றார், 10 ஆண்டுகளில் அவர் என்ன செய்தார்?


1) இயேசுவையும், மரியாளையும், யோசேப்பையும் அகதிகளாக சித்தரிக்கும் படம்

கலிபோர்னியாவில் உள்ள க்ளார்மொன்ட் யுனைடெட் மெதடிஸ்ட் சர்ச் (Claremont United Methodist Church) என்ற சபை, இயேசுவையும், அவரது தாய் மரியாளையும், யோசேப்பையும் அகதிகளாக சித்தரித்து, ஒவ்வொருவரையும் ஒரு கூண்டில் வைத்து ஒரு படத்தை வெளியிட்டு இருந்தது.

அந்த படத்தையும், கட்டுரையையும் இங்கு காணலாம்:

A church nativity scene depicts Jesus, Mary and Joseph as refugees separated in cages

The biblical story of Mary and Joseph fleeing from Israel to Egypt to escape King Herod's decree that all baby boys be killed is symbolic of the plight of thousands of refugees seeking asylum in America, she said.

"In the Claremont United Methodist Church nativity scene this Christmas, the Holy Family takes the place of the thousands of nameless families separated at our borders," Ristine said in the post. "Imagine Joseph and Mary separated at the border and Jesus no older than two taken from his mother and placed behind the fences of a Border Patrol detention center as more than 5,500 children have been the past three years."

"If this sparks conversation, that would be one good goal," Ristine told KABC.

முகநூல் மற்றும் இதர இணைய தளங்களில் இந்த படத்திற்கு  எதிர்ப்பும் வரவேற்பும் கிடைத்தது. அதாவது, அமெரிக்காவில் அகதிகளாக வருபவர்களுக்கு எதிராக நடக்கும் தீமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க இந்த படம் வெளியிடப்பட்டது என்று அந்த சபையில் ஊழியர் சொல்கிறார். 

குழந்தை இயேசுவையும், அவரது தாய் மரியாளையும் தனியாக கூண்டில் வைத்திருப்பதைப் பார்த்தால், எப்படி மனம் துக்கம் கொள்ளுமோ, அதே போல, அகதிகளாக வருபவர்களில் பெற்றோர்களை தனியாகவும், குழந்தைகளை தனியாகவும் பிரித்து அகதிகள் முகாம்களில்  வைப்பது தவறில்லையா?  அவர்களுக்கு  எதிராக செயல்படுவது தவறு இல்லையா? என்ற முறையில் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. 

நம் இந்தியாவிலும், என்ஆர்சி (NRC) என்றும் சிஎஎ (CAA) என்ற பெயரில் உலாவரும் மூன்றெழுத்துக்கள், மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கிக்கொண்டு  இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இதைப் பற்றி இங்கு எழுதுவது என் நோக்கமல்ல. தேவைப்படும் போது தனியாக அதைப் பற்றி சிந்திப்போம்.

மேற்கண்ட படத்தை பார்த்தபோது, எனக்கு தோன்றிய கேள்வி: இயேசுவும், அவரது தாய் மரியாளும், அவரது கணவர் யோசேப்பும் அகதிகளாக எகிப்தில் இருந்தார்களா?  இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

2) தேசிய  குடிமக்கள் பதிவேடு (NRC) செய்யச் சென்ற இயேசுவின் குடும்பம்

அரசாங்கம் எடுக்கும் குடிமக்கள் கணக்கெடுப்பில் தங்கள் பெயர்களை பதித்துக்கொள்வது தான் என் ஆர் சி (NRC - National Register of Citizens) என்று சுருக்கமாகச் சொல்லலாம் (முழூ விவரங்களுக்கு இந்த தொடுப்பை கவனிக்கவும்: en.wikipedia.org/wiki/National_Register_of_Citizens).

இயேசுவின் தாய் மரியாளும், யோசேப்பும் குடிமதிப்பு எழுதச் சென்ற போது மரியாளுக்கு பிரசவ நேரம் நெருங்கியது.

லூக்கா 2:1-6

1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. 2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. 3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். 4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, 5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான். 6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.

நம் இந்திய அரசாங்கம் என்ஆர்சி சட்டத்தை அமுல் படுத்தும் போது, நாமும் நம்முடைய குடிமதிப்பு எழுதச் செல்லவேண்டும் அல்லது ஆவணங்களை காட்டவேண்டும். இது எந்த முறையில் நடக்கும் என்று தெரியாமல், பல சந்தேகங்கள் இருப்பதினால் தான் பல‌ போராட்டங்கள் தற்போது இந்தியாவில் நடந்துக்கொண்டு இருக்கிறது. சீக்கிரமாக அரசாங்கம் மக்களின் சந்தேகங்களுக்கு பதில் கொடுத்தால், இந்த போராட்டங்கள் குறையும் என்று நான் நம்புகிறேன் (இன்றைய தேதி: 27th Dec 2019).

மேற்கண்ட நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு இயேசுவும் அவரது குடும்பமும், அகதிகளாக இருந்தார்கள் என்றுச் சொல்லமுடியாது. ஒரே நாட்டில் உள்ள நாசரேத்து என்ற ஊரிலிருந்து பெத்லகேம் என்ற சொந்த ஊருக்குச் சென்றார்கள்.

3) எகிப்து தேசத்தில் இயேசுவும், அவரது குடும்பமும் அகதிகளாக இருந்தார்களா?

இயேசு இரண்டு வயதுடையவராக இருந்த போது இன்னொரு நிகழ்ச்சி நடந்தது. ஏரோது 2 வயதுடைய குழந்தைகளை கொல்ல முயலுகின்றான் என்ற விவரம் அறிந்ததும், யோசேப்பு தன் குடும்பத்தோடு எகிப்துக்கு ஓடிப்போனார். மேலோட்டமாக படித்தால் இயேசுவும் அவரது பெற்றோர்களும் எகிப்து நாட்டில் அகதிகளாக இருந்தார்கள் என்று சொல்லத்தோன்றும்.

மத்தேயு 2:13 - 15

13. அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கேயே இரு என்றான். 14. அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப் போய், 15. ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 

அகதி (Refugee) என்றால் யார்?

போரின் காரணமாகவோ அல்லது இதர வன்முறையினாலோ தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தன் நாட்டின் எல்லையைத் தாண்டி, வேறு நாட்டுக்குச் சென்று தஞ்சம் புகுபவனை அகதி என்பார்கள்.

ஐக்கிய நாட்டு சபையின் படி அகதி என்பவன்:

Refugees are people who have fled war, violence, conflict or persecution and have crossed an international border to find safety in another country.

Source: www.unhcr.org/what-is-a-refugee.html

இதன்படி பார்த்தால், இயேசுவும் அவரது  பெற்றோர்களும் எகிப்து நாட்டுக்கு உயிர் தப்பிச் சென்றதால், அவர்களை அகதிகள் என்றுச் சொல்லலாம் அல்லவா? மேலோட்டமாக மேற்கண்ட வசனங்களை படிக்கும் போது, அவர்கள் அகதிகள் என்று நினைத்தேன். ஆனால், சிறிது ஆய்வு செய்துப்பார்த்த போது, அவர்கள் அகதிகள் அல்ல என்பதை தெரிந்துக்கொண்டேன்.

இது எப்படி சாத்தியம்? உயிர் தப்பி ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டுக்கு சென்றால், அவர்கள் அகதிகள் தானே!

யோசேப்பு தன் பிள்ளையின் உயிரைக் காப்பாற்ற இஸ்ரேல் நாட்டிலிருந்து எகிப்துக்குச் சென்றது உண்மை தான், ஆனால் அவ்விரு நாடுகளும் வெவ்வேறு நாடுகள் அல்ல. இயேசுவின் காலத்தில், ரோம சாம்ராஜ்ஜியத்தின் கீழ் தான் இஸ்ரேல் நாடும், எகிப்தும் இருந்தது. ஆக, யோசேப்பு ஒரு சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பிராந்தியத்திலிருந்து (இஸ்ரேல்), இன்னொரு பிராந்தியத்திற்கு(எகிப்து) சென்றார். யோசேப்பும், மரியாளும், இயேசுவும் அகதிகளாக எகிப்தில் இருக்கவில்லை. நம் இந்தியாவில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குச் சென்று வாழ்வது  எப்படியோ, அதுபோலத்தான், யோசேப்பும் சென்றார்.

4) அந்நியர்களை/அகதிகளை எப்படி கவனிக்கவேண்டும் என்று பைபிள் சொல்கிறது?

மனிதனை படைத்தவர் அவன் வேறு நாட்டில் ஒரு அகதியாக அந்நியனாக இருக்கும் போது, அவன் எப்படி உணருவான் என்பதை அறியாமலா இருப்பார்!  பைபிளின் தேவன் அந்நியர்கள் பற்றி யூதர்களுக்கு என்ன கட்டளைகள் கொடுத்திருக்கிறார் என்று இந்த கட்டுரைக்காக, தேடும் போது, மிகவும் அழகான வசனங்களை கொடுத்துள்ளார் என்பதை அறியமுடிந்தது. அவைகளின் சுருக்கத்தை இங்கு தருகிறேன்.

தமிழில் 'அந்நியன்', 'பரதேசி' என்று மொழிப்பெயர்த்தது, ஆங்கிலத்தில் "Foreigner" என்று வருகிறது.

1) கர்த்தரின் பஸ்கா பண்டிகையை ஆசரிக்க, மண்ணின் மைந்தனுக்கும், வேற்று நாட்டவனுக்கும் ஒரே சட்டம்

யாத்திராகமம் 12:49. சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.

Exodus 12: 49 The same law applies both to the native-born and to the foreigner residing among you.

2) வேற்று நாட்டவனுக்கு அநீதி செய்யாதே, உன் மீது சாபம் உண்டாகும்

உபாகமம் 27:19. பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்படவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

Deut 27:19 “Cursed is anyone who withholds justice from the foreigner, the fatherless or the widow.” Then all the people shall say, “Amen!”

3) அந்நியனை சிறுமைப் படுத்தாதே

யாத்திராகமம்  22: 21. அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.

Exodus  22:21 “Do not mistreat or oppress a foreigner, for you were foreigners in Egypt.

4) அந்நியனை ஒடுக்கவேண்டாம், ஒரு காலத்தில் நீயும் அந்நியனாக இருந்தவன் தானே

யாத்திராகமம்   23: 9. அந்நியனை ஒடுக்காயாக; எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.

Exodus 23:9 “Do not oppress a foreigner; you yourselves know how it feels to be foreigners, because you were foreigners in Egypt.

5) அந்நியனுக்கு இடுக்கன் செய்வது பாவம்

எசேக்கியேல்  22:7. உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாய் எண்ணினார்கள்; உன் நடுவில் பரதேசிக்கு இடுக்கண் செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள்.

Ezekiel 22:7 In you they have treated father and mother with contempt; in you they have oppressed the foreigner and mistreated the fatherless and the widow. 

6) கிறிஸ்துவுக்கு அனைவரும் சமமே

கலாத்தியர் 3:28. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

Galatians 3: 28 There is neither Jew nor Gentile, neither slave nor free, nor is there male and female, for you are all one in Christ Jesus.

7) அந்நியன் மேல் அன்பு வைக்கும் தேவன், நீயும் அப்படியே செய்

உபாகமம்  10:17. உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. 18. அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். 19. நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக.

Deuteronomy  10 :17 For the Lord your God is God of gods and Lord of lords, the great God, mighty and awesome, who shows no partiality and accepts no bribes. 18 He defends the cause of the fatherless and the widow, and loves the foreigner residing among you, giving them food and clothing. 19 And you are to love those who are foreigners, for you yourselves were foreigners in Egypt.

8) அந்நிய கூலியாட்களை ஒடுக்கவேண்டாம்

உபாகமம்  24: 14. உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக. 15. அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.

Deuteronomy 24: 14 Do not take advantage of a hired worker who is poor and needy, whether that worker is a fellow Israelite or a foreigner residing in one of your towns. 15 Pay them their wages each day before sunset, because they are poor and are counting on it. Otherwise they may cry to the LORD against you, and you will be guilty of sin.

9) அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்;

எபிரெயர்  13: 1. சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. 2. அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.

Hebrews 13:1 Keep on loving one another as brothers and sisters. 2 Do not forget to show hospitality to strangers, for by so doing some people have shown hospitality to angels without knowing it.

10) பரதேசிக்காக இரக்கம் பாராட்டு

லேவியராகமம் 23: 22. உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

Leviticus  23:22 “‘When you reap the harvest of your land, do not reap to the very edges of your field or gather the gleanings of your harvest. Leave them for the poor and for the foreigner residing among you. I am the LORD your God.’”

11) சுதேசிக்கும் பரதேசிக்கும் ஒரே தண்டனை கொடுக்கவேண்டும்

லேவியராகமம் 24: 17. ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும். 18. மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன். 19. ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது. 20. நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும். 21. மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன். 22. உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

Leviticus 24:17 “‘Anyone who takes the life of a human being is to be put to death. 18 Anyone who takes the life of someone’s animal must make restitution—life for life. 19 Anyone who injures their neighbor is to be injured in the same manner: 20 fracture for fracture, eye for eye, tooth for tooth. The one who has inflicted the injury must suffer the same injury. 21 Whoever kills an animal must make restitution, but whoever kills a human being is to be put to death. 22 You are to have the same law for the foreigner and the native-born. I am the Lord your God.’”

12) பரதேசிக்கு அநியாயம் செய்தவனுக்கு தண்டனை

மல்கியா 3:5. நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Malachi 3:5 “So I will come to put you on trial. I will be quick to testify against sorcerers, adulterers and perjurers, against those who defraud laborers of their wages, who oppress the widows and the fatherless, and deprive the foreigners among you of justice, but do not fear me,” says the Lord Almighty.

13) அந்நியனுக்கு செய்த நன்மை, இறைவனுக்கே செய்த நன்மை

மத்தேயு 25: 35. பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

Matthew 25:35 For I was hungry and you gave me something to eat, I was thirsty and you gave me something to drink, I was a stranger and you invited me in,

14) பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்

சங்கீதம் 146:9. பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.

Psalm 146:9 The Lord watches over the foreigner and sustains the fatherless and the widow, but he frustrates the ways of the wicked.

 

15) அந்நியனை சிறுமை படுத்தவேண்டாம்

லேவியராகமம்  19:33. யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். 34. உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 

சகரியா  7:9. சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, 10. விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள் என்றார்.

எரேமியா  7: 5. நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் நன்றாய்ச் சீர்ப்படுத்தி, நீங்கள் மனுஷனுக்கும் மனுஷனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து, 6. பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலுமிருப்பீர்களேயாகில்,

Leviticus 19:33-34 33 "‘When a foreigner resides among you in your land, do not mistreat them. 34 The foreigner residing among you must be treated as your native-born. Love them as yourself, for you were foreigners in Egypt. I am the Lord your God.

Zechariah 7:9-10 9 “This is what the Lord Almighty said: ‘Administer true justice; show mercy and compassion to one another. 10 Do not oppress the widow or the fatherless, the foreigner or the poor. Do not plot evil against each other.’

Jeremiah 7:5-6 5 If you really change your ways and your actions and deal with each other justly, 6 if you do not oppress the foreigner, the fatherless or the widow and do not shed innocent blood in this place, and if you do not follow other gods to your own harm,

16) அந்நியன் தேவனிடம் ஜெபித்தால், கேட்பீராக‌ - யூத அரசனின் ஜெபம்

I இராஜாக்கள் 8: 41. உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே. 42. அப்படிக்கொத்த அந்நிய ஜாதியானும், உமது நாமத்தினிமித்தம் தூரதேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால்,  43. உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக

1 Kings 8:41-43 41 “As for the foreigner who does not belong to your people Israel but has come from a distant land because of your name— 42 for they will hear of your great name and your mighty hand and your outstretched arm—when they come and pray toward this temple, 43 then hear from heaven, your dwelling place. Do whatever the foreigner asks of you, so that all the peoples of the earth may know your name and fear you, as do your own people Israel, and may know that this house I have built bears your Name.

17) என் வீட்டுக்கதவுகள் அந்நியனுக்கு திறந்தே இருந்தன, யோபுவின் ஜெபம்

யோபு  31: 32. பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.

Job 31:32 but no stranger had to spend the night in the street, for my door was always open to the traveler

18) உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக - இது அனைத்து சட்டங்களின் சுருக்கம்

கலாத்தியர்  5: 13. சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். 14. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். 15. நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள். அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

Galatians 5:13-15 13 You, my brothers and sisters, were called to be free. But do not use your freedom to indulge the flesh[a]; rather, serve one another humbly in love. 14 For the entire law is fulfilled in keeping this one command: “Love your neighbor as yourself.” 15 If you bite and devour each other, watch out or you will be destroyed by each other (all quotes taken from NIV English translation.)

இவைகள் பைபிளிலிருந்து எடுத்த சில வசனங்கள் மட்டுமேயாகும்.  இவைகளில் பெரும்பான்மையான வசனங்கள் பழைய ஏற்பாட்டிலிருந்து எடுத்தவைகளாகும்.

5) முஹம்மதுவும் அகதியாக மதினாவிற்குச் சென்றார், 10 ஆண்டுகளில் அவர் என்ன செய்தார்?

முஹம்மது ஆரம்பகாலத்தில் மக்காவில் தன் இறைச்செய்தியை அறிவித்தார். சிலர் ஏற்றனர், பலர் வெறுத்தனர், துன்புறுத்தினர். ஒரு கூட்ட முஸ்லிம்களை கிறிஸ்தவ நாட்டுக்கு (அபிசீனியாவிற்கு) தஞ்சம் புக முஹம்மது அனுப்பினார். கிறிஸ்தவ நாட்டு அரசன் அவர்களுக்கு  தஞ்சம் கொடுத்தான்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் தன் உயிருக்கு ஆபத்து வரும் போது, உயிர் தப்ப முஹம்மது மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் (இடம் பெயர்ந்தார்) செய்தார். அவரோடு முஸ்லிம்களும் சென்றார்கள்.

மதினாவில் இவருக்கு தஞ்சம் கொடுத்தார்கள். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் முஹம்மது என்ன செய்தார்? தனக்கு தஞ்சம் கொடுத்த நாட்டுக்கு முஹம்மது ஆற்றிய தொண்டு என்ன?  வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டார், வன்முறைச் செயல்களில் ஈடுபட்டார், வலியச் சென்று போர் புரிந்தார். 10 ஆண்டுகளில் தன் ஆள்பலத்தின் மூலமாக, ஒட்டு மொத்த அரேபிய தீயகர்ப்பத்தை ஆக்கிரமித்தார், இரத்தம் சிந்தினார், ஆண்களைக் கொன்று பெண்களை அடிமைகளாக விற்றார், குழந்தைகளை அடிமைகளாக விற்றார். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.

மொத்தம் 10 ஆண்டுகளில் 95 போர்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டார், பார்க்க: https://en.wikipedia.org/wiki/List_of_expeditions_of_Muhammad

இந்த கட்டுரையின் முடிவுக்கு வந்துள்ளோம்.

முடிவுரை:

பைபிளின் படி, பஞ்சம் உண்டானபோது, ஆபிரகாம் எகிப்துக்குச் சென்றார், ஈசாக்கும் இதே போன்று எகிப்துக்குச்  சென்றார், யாக்கோபின் குடும்பமும் சென்றது. யாக்கோபின் குடும்பம் அதாவது இஸ்ரவேலர்கள் 400க்கும் அதிகமான ஆண்டுகள் எகிப்தில் வாழ்ந்தார்கள். எகிப்தியர் அவர்களை அடிமைப்படுத்தினார்கள்.

பைபிளின் தேவன் இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுதலைச் செய்து, கானானுக்கு கொண்டுச் சென்றார். அங்கே மேற்கண்ட விதத்தில் அந்நியர்களை ஒடுக்கவேண்டாம் என்று யூதர்களுக்கு தேவன் கட்டளையிட்டார். நீங்கள் ஒரு காலத்தில் எகிப்தில் அந்நியர்களாக இருந்தீர்கள் என்பதை மறக்கவேண்டாம் என்று அனேக முறை அவர்களை தேவன் எச்சரித்தார். பழைய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசன புத்தகம் (மல்கியா) வரையில் தேவன் அந்நியர்களை ஒடுக்கவேண்டாம் என்று கட்டளை கொடுத்துக்கொண்டே இருந்தார்.

தாவீது ராஜா கூட ஒரு காலத்தில் அந்நிய தேசத்தில் தஞ்சம் புகுந்தார், அந்த நாட்டுக்கு தீங்கு செய்யவில்லை. தஞ்சம் கொடுத்த தேசத்திற்கு துரோகம் செய்யவில்லை.

இஸ்ரவேலர்கள் பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டுப்போனபோது கூட, தேவன் அவர்களுக்குச் சொன்ன கட்டளை இது தான்: பாபிலோனுக்காக ஜெபியுங்கள், அந்நாட்டுக்காக நன்மையை சமாதானத்தை தேடுங்கள், அப்போது நீங்கள் சமாதானமாக இருப்பீர்கள்.

எரேமியா 29:4. இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர், தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால், 5. நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். 6. நீங்கள் பெண்களை விவாகம்பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று, உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள்; இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி, 7. நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.

Jeremiah 29:4 This is what the Lord Almighty, the God of Israel, says to all those I carried into exile from Jerusalem to Babylon: 5 “Build houses and settle down; plant gardens and eat what they produce. 6 Marry and have sons and daughters; find wives for your sons and give your daughters in marriage, so that they too may have sons and daughters. Increase in number there; do not decrease. 7 Also, seek the peace and prosperity of the city to which I have carried you into exile. Pray to the Lord for it, because if it prospers, you too will prosper.”

இயேசுவும் அவரது குடும்பமும் எகிப்துக்குச் உயிர் தப்ப சென்றார்கள், மறுபடியும் திரும்ப தங்கள் நாட்டுக்குத் திரும்பினார்கள். அந்த காலத்தில் உலகளாவிய சட்டம் இல்லை எனவே, போர்கள் நடந்தன மக்கள் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு உயிர்தப்பச் சென்றார்கள். ஆனால், இக்காலத்தில் இவ்வளவு நாகரீகம் வளர்ந்த பின்பும் மக்கள் அகதிகளாக இதர நாடுகளுக்குச் செல்வது என்பது மனித வர்க்கத்திற்கு அவமானமாகும்.

முஹம்மதுவும் உயிர் தப்ப மதினா சென்றார், அகதியாக இருந்தார், ஆனால் நடந்தது என்ன? சரித்திரம் என்ன சொல்கிறது? நடந்துமுடிந்த சரித்திரத்தை யாரும் மாற்றமுடியாது, திருப்பி எழுதமுடியாது. 

முஹம்மது விதைத்தார், இன்று அப்பாவி முஸ்லிம்கள் அறுவடைச் செய்கிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள், முஸ்லிம் நாடுகளிலும் அவர்கள் துன்புறுகிறார்கள், முஸ்லிமல்லாத நாடுகளில் சிலவற்றிலும் துன்புறுகிறார்கள்.

இந்த துன்பத்தை யாரிடம் சென்று முறையிடுவது? முஸ்லிம்களை நோக்கியே காய்கள் நகர்த்தப்படுகின்றனவே!, அரசியல் செய்யப்படுகின்றதே! இவர்களை காப்பாற்ற யார் வருவார்கள்? தங்களை காப்பாற்றிக்கொள்ள முஸ்லிம்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

இதற்கு ஒரே வழி உண்டு, சமாதானப் பிரபுவாகிய இயேசுவை தங்கள் இருதயத்தில் வரும்படி துவா செய்வது தான். பெத்லகேமில் பிறந்த இயேசு இருதயங்களில் பிறக்கவேண்டும், அப்போது முஸ்லிம்கள் வித்தியாசத்தை காண்பார்கள். முஸ்லிம்கள் இயேசுவை தங்கள் இருதயத்தில் வாசம் செய்யும் படி அழைப்பார்களா?

முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாக முஹம்மதுவும், குர்‍ஆனும் இருக்கும்வரை, முஸ்லிம்களுக்கு உலகில் எங்கும் சமாதானம் கிடைக்காது, அதே போல உலகத்துக்கும் சமாதானம் கிடைக்காது. இயேசுவே வழி, அவரே சத்தியம், அவரே ஜீவன்.


2019 கிறிஸ்மஸ் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்