குர்ஆன் முரண்பாடுகள்

ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?

குர்ஆன் 76:5 மற்றும் 37:6-8 கீழ்கண்ட வாறு கூறுகிறது:

அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம். (குர்ஆன் 76:5)

நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம். (அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்). (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள். (குர்ஆன் 37:6-8)

குர்ஆன் 15:16-18, 55:33-35ம் வசனங்களை நாம் பார்க்கும் போதும், இதைப்பற்றியே கூறுவதைப்போல் இருக்கின்றது.

அல்லாஹ் சாத்தானின் மீது எறிவதற்காகவா நட்சத்திரங்களை படைத்தார்? மேலானோர் கூட்டத்தின் பேச்சை சாத்தான் கேட்கக்கூடாது என்பதற்காகவா நட்சத்திரங்கள் படைக்கப்பட்டன? இது விஞ்ஞான உலகின் பார்வைக்கு முரண்பாடாக உள்ளது.

ஆங்கில மூலம்: Qur'an Contradiction: Throwing Stars at the Devils?

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை படிக்கவும்